ஆளுமை:குமாரசுவாமி, சின்னத்தம்பி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:57, 29 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=குமாரசுவாம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குமாரசுவாமி, சின்னத்தம்பி
தந்தை சின்னத்தம்பி
தாய் சின்னம்மையார்
பிறப்பு
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சி. குமாரசுவாமி மட்டக்களப்பு, அக்கறைப்பற்றினைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை; சின்னத்தம்பி, தாய்; சின்னம்மையார். இவர் தமது இளமைக்கால கல்வியை மட்டக்களப்பிலே பெற்றுக் கொண்ட பின், யாழ்ப்பாணம் சென்று த. கைலாசபிள்ளையவர்களிடத்தில் சைவ சமய இலக்கியங்களையும், சமஸ்கிருதத்தையும் சிறப்புறக் கற்றுக் கொண்டார்.

தமிழிலக்கிய துறையில் மட்டுமன்றி நாட்டு வைத்தியத் துறையிலும் மிகுந்த புலமை கொண்டிருந்த இவர் ஆயுள்வேத வைத்தியக் கருவூலம், மலேரிய என்னும் காட்டுச்சுரம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். அரசடி தமிழ் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இவர் சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். விபுலானந்த அடிகளாருக்கு சமஸ்கிருதம் கற்பித்த ஆசிரியர் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 86