ஆளுமை:ஹென்றி மார்ட்டின்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:09, 28 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=என்றி மார்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் என்றி மார்ட்டின்
பிறப்பு 1811
இறப்பு 1861.03.31
ஊர் சுண்டுக்குளி
வகை ஆசிரியர், பத்திரிகையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

என்றி மார்ட்டின் (1811 - 1861.03.31) யழ்ப்பாணம், சுண்டுக்குளியைச் சேர்ந்த ஆசிரியர், பத்திரிகையாளர். இவர் தனது தொடக்கக் கல்வியைத் தெல்லிப்பழையில் அமைந்திருந்த அமெரிக்க மிஷன் தருமப் பாடசாலையில் பெற்ற பின்னர், தொடர்ந்து பட்டிகோட்டா செமினறியிலும் கல்வி கற்றார். பின்னர் அதே நிறுவனத்திலேயே ஆசிரியராகவும் பணியில் அமர்ந்தார். 1941 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இலங்கையின் முதல் தமிழ்ப் பத்திரிகையும், யாழ்ப்பாணத்தின் முதல் செய்திப் பத்திரிகையுமான உதயதாரகையின் முதல் ஆசிரியராகப் பணி புரிந்தார். இருமொழிப் பத்திரிகையான இதில் இவர் ஆங்கிலப் பிரிவின் ஆசிரியராக கடமையாற்றினார். 1843ல், வட்டுக்கோட்டைச் செமினரியில் இருந்து விலகி, அரசாங்கக் களஞ்சியப் பொறுப்பாளர் என்னும் பதவியில் அமர்ந்தார். அத்துடன், உயர் நீதிமன்ற வழக்குகள் நடைபெறும் காலங்களில் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 51

வெளி இணைப்புக்கள்