ஆளுமை:முத்துக்குமாரசுவாமி தம்பிரான், வெற்றிவேற்பிள்ளை
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:40, 28 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=முத்துக்கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | முத்துக்குமாரசுவாமித் தம்பிரான், வெற்றிவேற்பிள்ளை |
தந்தை | வெற்றிவேற்பிள்ளை |
பிறப்பு | 1885 |
இறப்பு | 1949 |
ஊர் | வண்ணார்பண்ணை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வெ. முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் (1885 - 1949) யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வெற்றிவேற்பிள்ளை. இவர் இந்தியாவில் சிதம்பர செல்லப்பா சுவாமிகள், ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் ஆகிய பெரியோர்களிடத்திலே இலக்கண இலக்கியங்களை முறையே கற்றார். பின்னர் சூரியனார் கோயில் ஆதீன மகாசந்நிதானம் திருப்பெருந்திரு. முத்துக்குமார தேசிகரிடம், வடமொழியிலும் தென்மொழியிலும் ஞான நூல்களை ஓதி உணர்ந்து முத்தீட்சைகளையும் பெற்றுக் கொண்டார்.
சிவஞான மாபாடியத்தை ஆரய்ந்து முதன் முதல் முழு நூலாக வெளியிட்டவர் இவரே. அத்தோடு சிவாக்கிரயோகிகள் அருளிச் செய்த சிவாக்கிரபடியம், கிரியாதீபிகை என்னும் இரு வடமொழி நூல்களும், சைவசந்நியாச பத்ததி, திருநாரையூர்ப் புராணம் அகிய நூல்களும் இவராலேயே வெளிடப்பட்டன.
வளங்கள்
- நூலக எண்: 963 பக்கங்கள் 47-48