ஆளுமை:வரதராசா, பிள்ளைநாயகம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:37, 21 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=வரதராசா பிள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வரதராசா பிள்ளைநாயகம்
தந்தை பிள்ளைநாயகம்
பிறப்பு 1954.03.04
ஊர் காங்கேசன்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பி.வரதராசா (1954.03.04 - ) யாழ்ப்பாணம் காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும் அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட இசை நாடகக் கலைஞர். இவரது தந்தை பிள்ளைநாயகம். இலங்கை தேசிய சேமிப்பு வங்கியின் முகாமையளராக இவர் இசை நாடகத் துறையிலும் வாத்தியக் கருவிகளை இசைப்பதிலும் கைதேர்ந்தவர்.

நாடகக் கலாநிதி அமரர் வி. வி. வைரமுத்து அவர்களுடன் ஆயிரம் அரங்குகளில் தன் இசை நாடக ஆற்றலை வெளிப்படுத்திய இவர் வி. வி. வைரமுத்து இறப்பதற்கு சில நாட்களின் முன் அவருடன் இணைந்து ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் அரங்கில் இசை நாடகக் காட்சிகளில் பங்குபற்றினார். இந் நாடகம் பல தடவைகள் ரூபவாஹினியில் ஒளிபரப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு ஈழத்தின் பிரபல இசைக் குழுக்களான இராஜன் இசைக்குழு, சாரங்கா இசைக்குழு ஆகியவற்றின் பல்துறை இசைக் கலைஞராக இவர் செயற்பட்டு வந்துள்ளார்.

தபேலா சக்ரவர்த்தி எனும் பட்டத்தை இவர் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

{{வளம்|7571|180}