ஆளுமை:புவனேஸ்வரன், சங்கரப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:25, 20 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=புவனேஸ்வரன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் புவனேஸ்வரன், சங்கரப்பிள்ளை
தந்தை சங்கரப்பிள்ளை
பிறப்பு 1936.10.26
ஊர் வட்டுக்கோட்டை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ச.புவனேஸ்வரன் (1936.10.26 - ) யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இசை நாடகக் கலைஞர். இவரது தந்தை சங்கரப்பிள்ளை. 1951ஆம் ஆண்டிலிருந்து 1974ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாண கல்லூரியில் படித்த காலத்தில் கல்லூரி நாடகங்களில் பங்கு பற்றி தன் திறமையை வெளிப்படுத்திய இக் கலைஞர் அராலி சரஸ்வதி நாடகமன்றத்தில் இணைந்து பெண் பாத்திரத்தில் நடித்து வந்தார்.

1970ஆம் ஆண்டு திரைக்கு வந்த றொபின் தம்பு அவர்களின் வெண்சங்கு திரைப்படத்தில் இவர் நடித்தமைக்காக பண்ணாகம் மெய்கண்டான் வித்தியாலயத்திலும், சங்கானை அரசடி வைரவர் ஆலய அரங்கிலும், அராலி வாழ் மக்களாலும் இவர் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

வலிகாமம் மேற்கு அரசாங்க அதிபர் பிரிவு இலக்கிய சமய கலாசார பேரவை இவரின் நடிப்புத் திறனை கௌரவிக்கும் முகமாக 1974ஆம் ஆண்டு கலாசார அமைச்சர் உயர்திரு எஸ்.எஸ்.குணதிலக அவர்களைக் கொண்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தது. மேலும் 2005ஆம் ஆண்டு இவர் தனது அறுபத்தெட்டாவது வயதில் நல்லுர் பிரதேச செயலக கலாசாரப் பேரவையின் விழாவில் கண்டி அரசன் நாடகத்தில் நடித்தமைக்காக அதே ஆண்டில் கலைஞானச்சுடர் பட்டம் வழங்கி இவர் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 160