ஆளுமை:வேல்மாறன், சதாசிவம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:01, 18 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=வேல்மாறன், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வேல்மாறன், சதாசிவம்
தந்தை சதாசிவம்
பிறப்பு 1966.06.18
ஊர் வண்ணார்பண்ணை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ச.வேல்மாறன் (1966.06.18 - ) யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர். இவரது தந்தை சதாசிவம். தனது பத்தாவது வயதிலிருந்தே தந்தையிடம் மிருதங்க இசையைப் பயின்று வந்த இவர் பின்னர் நாச்சிமார் கோவிலடி வே.அம்பலவாணர். சங்கீத இரத்தினம் சி.மகேந்திரன், சங்கீத இரத்தினம் ம.சிதம்பரநாதன், மிருதங்க வித்துவான் அளவையூர் ஐ.சிவபாதபிள்ளை ஆகியோரிடம் மிருதங்க வாத்திய இசைக் கலையின் நுணுக்கங்களை முறையாகக் கற்றுத் தேர்ந்தார்.

இவர் வட இலங்கை சங்கீத சபைத் தேர்வில் ஆசிரியர் தரம் ஆறில் சித்தியடைந்து கலாவித்தகர் பட்டம் பெற்றுக் கொண்டார். 1989ஆம் ஆண்டு நல்லை ஆதீன மண்டபத்தில் சங்கீத வித்துவான், இராமநாதன், வி.எஸ்.சீனிவாசன் ஆகியோருடன் இணைந்து தனது மிருதங்க அரங்கேற்றத்தை நிகழ்த்தினார். நோர்வே, பிரான்ஸ், ஜேர்மனி, டென்மார்க், கொலண்ட், சுவிஸ் ஆகிய நாடுகளில் தன் ஆற்றலை வெளிப்படுத்தியிருக்கும் இவர் யாழ்ப்பாண மாவட்டத்தில் பல சமூக சேவை நிறுவனங்களாலும், ஆலயங்களின் நிர்வாகத்தினாலும், அரச கல்லூரி அமைப்புக்களாலும் பல இடங்களில் பொன்னாடை போர்த்தியும், பட்டங்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 138