ஆளுமை:ஜெயராமன், அம்பலவாணர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜெயராமன், அம்பலவாணர்
தந்தை அம்பலவாணர்
பிறப்பு 1959.08.29
ஊர் வண்ணார்பண்ணை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அ.ஜெயராமன் (1959.08.29 - ) யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர். இவரது தந்தை அம்பலவாணர். ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் கலட்டி மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலையிலும், தொடர்ந்து யாழ்ப்பாணம் திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரியிலும், கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் கற்றார். தனது ஒன்பதாவது வயதிலிருந்தே பிரபல வயலின் வித்துவான் பிரம்மஶ்ரீ. எஸ்.சர்வேஸ்வரசர்மா அவர்களிடம் முறைப்படி வயலின் இசையை கற்றுக்கொண்டார். வட இலங்கை சங்கீத சபை பாடத்திட்டத்திற்கு அமைய ஆசிரியர் தரம் வரை வயலின் இசையைப் பயின்றுள்ள இவரது முதலாவது தனி வயலின் இசைக் கச்சேரி வண்ணை ஶ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் பன்னிரண்டு வயதில் அரங்கேறியது.

இவர் உ. இராதாகிருஷ்ணனுடன் சேர்ந்து 1981 - 1983 வரை இலங்கையின் பல்வேறு இடங்களிலும் வயலின் வாசித்துள்தோடு ஆலயங்கள், கலைவிழாக்கள், இசை நிகழ்வுகள், திருமண நிகழ்வுகள், நடன நிகழ்வுகள், நாடக நிகழ்வுகள் எனப் பல நிகழ்ச்சிகளில் வயலின் இசையை பக்க வாத்தியமாக இசைத்துவருகின்றார்.

இந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சு 2003ஆம் ஆண்டு இரண்டாவது உலக மகாநாட்டு நிகழ்வின்போது இவரை பாராட்டிச் சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் கௌரவித்துள்ளது. சுழிபுரம், பறாளை ஶ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் தேவஸ்தானம் 2004ஆம் ஆண்டு இவரின் கலைப்பணியைப் பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளது. இசைஞானசுரபி என்னும் பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 132