நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு கிராஞ்சியம்பதி சிவன் கோயில்

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:47, 10 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ புங்குடுதீவு கிராஞ்சியம்பதி சிவன் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் புங்குடுதீவு
முகவரி 3ஆம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

புங்குடுதீவு கிராஞ்சியம்பதி சிவன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவு 3ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக சிவபெருமான் எழுந்தருளியுள்ளார்.

1923ஆம் ஆண்டு தம்பையா மார்க்கண்டேயக் குருக்கள் அவர்கள் இந்தியாவிற்குச் சென்று காசி நகரிலே கங்கையில் நீராடும் போது உருண்டை வடிவமான ஏதோ ஒன்று அவர் கையில் சிக்கியது. அது ஒரு சிவலிங்கமாக இருக்கக் கண்ட அவர் அதனை எடுத்துவந்து புங்குடுதீவில் தனக்கு சொந்தமான இடத்திலேயே கோவிலை அமைக்க வேலைகள் செய்தார். 1928ஆம் ஆண்டில் இவர் சிவபதம் அடைய, பின்னர் இவருடைய மனைவி செல்லம்மா அவர்கள் தனது மகனோடும் வேறு பலரது உதவியுடனும் இக் கோவிலை கட்டி முடித்து 1961ஆம் ஆண்டில் 17ஹோம குண்டலங்களுடன் மகா கும்பாபிஷேகம் செய்து முடித்தார்.