ஆளுமை:நித்தியானந்தசர்மா, வைத்தீஸ்வரசர்மா
பெயர் | நித்தியனந்தசர்மா, வைத்தீஸ்வரசர்மா |
தந்தை | வைத்தீஸ்வரசர்மா |
பிறப்பு | 1946.09.25 |
ஊர் | மூளாய் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வை.நித்தியானந்தசர்மா (1946.09.25 - ) யாழ்ப்பாணம் மூளாயைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட கலைஞர். இவரது தந்தை வைத்தீஸ்வரசர்மா. தமிழ் இலக்கியம், சமய, புராண, இதிகாச வரலாறுகளை இசை பண்கலந்த சங்கீத கதாப்பிரசங்க வடிவில் வழங்கிவரும் இவர் நல்லூர் உற்சவ கால இருபத்தைந்து நாட்களும் வருடாவருடம் மேற்கு வீதியில் தொடராக சங்கீத கதாப்பிரசங்கத்தை நடத்தி வந்தவராவார்.
கர்நாடக சங்கீதம், இசை கலந்த பிரசங்கம் ஆகியவற்றை தென்னிந்தியாவைச் சேர்ந்த ஐயாக்கண்ணு தேசிகரிடம்முறையாகப் பயின்று தேர்ச்சிப் பெற்ற இவர் நாற்பது வருடகாலம் அனுபவம் மிக்கவராவார். பால பண்டிதர் பரீட்சையில் சித்தியடைந்த நித்தியானந்தசர்மா மணிஐயர் என்று அழைக்கப்பட்ட நல்லை ஆதீன முதலாவது குருமகாசந்நிதானத்தின் சங்கீத கதாப்பிரசங்க குழுவில் பணியாற்றி அவரையே குருவாக ஏற்றுள்ள பெருமை இவருக்கு உண்டு.
கானகதாவாரிதி, இசைக் கதாமணி, முத்தமிழ் மாமணி, இராமாயண கதாதிலகம், முத்தமிழருவி, வாகீஸ கலாநிதி ஆகிய பட்டங்களைப் பெற்றிருக்கும் இவர் பலமுறை பொன்னாடை போர்த்தி பொற்கிளி வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 109