ஆளுமை:கானமூர்த்தி, கோதண்டபாணி
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:22, 24 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | கானமூர்த்தி, வி. கே. |
தந்தை | கோதண்டபாணி |
தாய் | இராஜேஸ்வரி |
பிறப்பு | 1948.09.10 |
இறப்பு | 2008 |
ஊர் | கோண்டாவில் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கோதண்டபாணி இராஜேஸ்வரி தம்பதிகளுக்கு 1945.01.03இல் மகனாகப் பிறந்தவர் நாதஸ்வர இன்னிசை வேந்தர் கானமூர்த்தி அவர்கள். இவர் நாதஸ்வர பயிற்சியை 14 ஆவது வயதில் தனது மாமனார் நாராயணசாமி அவர்களிடமும் அதன்பின்னர் மாவிட்டபுரத்தைச் சேர்ந்த இராசா என்பவரிடமும் கற்றார். தனது இளைய சகோதரனான பஞ்சமூர்த்தியுடன் இணைந்து பல்லாண்டுகளாக இலங்கையில் பல பாகங்களிலும், தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல பாகங்களிலும் நாதசுவரக் கச்சேரிகளை நடத்தினார். இவரது இசை ஞானத்திற்கு கெளரவமாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி அரங்கில் 'நாதாமிர்த கிரவுஞ்சம்' என்னும் பட்டத்தை 1989இல் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 566