ஆளுமை:சண்முகலிங்கன், நாகலிங்கம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:26, 9 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சண்முகலிங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சண்முகலிங்கன், நாகலிங்கம்
தந்தை நாகலிங்கம்
தாய் நகுலேசுவரி
பிறப்பு
ஊர் தெல்லிப்பளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நா.சண்முகலிங்கன் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட ஓர் எழுத்தாளர், நடிகர், பாடகர். இவரது தந்தை பெயர் நாகலிங்கம், தாய் பெயர் நகுலேசுவரி. இவர் ஆரம்பக்கல்வியை யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு கட்டுவன் மயிலிட்டி தெற்கு ஞானோதாய வித்தியாசாலையிலும், உயர்தரக்கல்வியை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிலும் கற்றார். பின்னர் பி.எட் இளமாணிப் பட்டப்படிப்பினை கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் சித்தி அடைந்து முதுமாணிப் பட்டத்திற்கான ஆய்வுப் பயிற்சியை பிலிப்பைன்ஸ் நாட்டின் அற்றனையோ டீ மனிலா பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொண்டார். மேலும் மகாஜனக் கல்லூரியில் மாணவனாக இருந்த காலங்களில் அகில இலங்கை ரீதியில் சிறந்த நடிகருக்கான தங்கப் பதக்கங்களையும் பெற்றுள்ளார்.

1981ஆம் ஆண்டு உதவி விரிவுரையாளராக பேராசிரியர் பேராசிரியர் கா. கைலாசபதி அவர்கள் கலைப்பீடாதிபதியாக இருந்த காலத்தில் பணியை ஆரம்பித்தார். 2007, டிசம்பர் 28 முதல் 2011, மார்ச் 31 வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும் பணியாற்றினார்.

என் அம்மாவின் கதை, என் அப்பாவின் கதை, இதயரஞ்சனி, வானொலிச்சித்திரங்கள், சந்தனமேடை, நாகரிகத்தின் நிறம், மரபுகளும் மாற்றங்களும், சமூக மாற்றத்தில் பண்பாடு, பண்பாட்டின் சமூகவியல், தொல்சீர் சமூகவியல் சிந்தனையாளர், சான்றோன் எனக்கேட்ட தாய், ஊழித்தாண்டவம், Cult Murukan in Eastern Srilanka, A New Face of Durga,Kalinga Publications போன்ற பல நூல்களை இவர் வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 71


வெளி இணைப்புக்கள்