ஆளுமை:ஜெயசீலன், தனபாலசிங்கம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:05, 1 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஜெயசீலன், த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜெயசீலன், தனபாலசிங்கம்
தந்தை தனபலசிங்கம்
தாய் மேனகா
பிறப்பு 1973.03.05
ஊர் நல்லூர்
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

த.ஜெயசீலன் (1973.03.05) யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த ஓர் கவிஞர். இவரது தந்தையார் பெயர் தனபாலசிங்கம், தாயார் பெயர் மேனகா. இவர் ஆரம்பக் கல்வியை நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்திலும், பின் யாழ் இந்து கல்லூரியிலும் கற்றார். உயர்தரத்தில் உயிரியல் பாடத்தில் பயின்று, 2000 ஆம் ஆண்டில் யாழ் பல்கலைக் கழகத்தில் விஞ்ஞானமாணிப் பட்டத்தை பெற்றதோடு 2007 இல் யாழ் பல்கலைக்கழகத்தில் ‘குடிசன அபிவிருத்தியில் முதுகலைமாணிப் பட்டத்தையும் பெற்றார். பின்னர் ஆரம்பத்தில் உடுவில் மகளிர் கல்லூரி, விசுவமடு மத்திய மகா வித்தியாலயம், பளை மத்திய கல்லூரி என்பவற்றில் உயிரியல் ஆசிரியராக பணியாற்றிய இவர் 2001 இல் நடந்த இலங்கை நிர்வாக சேவை பரீட்சையில் சித்தியெய்து நிர்வாக சேவையில் கடமையாற்றுகின்றார்.

இயல்பாக கவிதைத்துறையில் ஏற்பட்ட திடீர் ஆர்வத்தால் 1992 இல் யாழ் இந்துக் கல்லூரி உயர்தர மாணவர் மன்ற நிகழ்வுக்காக கவிதை எழுதியவர் தற்சமயம் மூவாயிரத்து அறுநூறு வரையான கவிதைகளை இயற்றியுள்ளார். சாளரம் சஞ்சிகையே முதன் முதலில் இவரது கவிதை ஒன்றை பிரசுரித்துள்ளது. அதன்பின் சிரித்திரன் சஞ்சிகை மூலமும் இவரது கவிதைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 1995 இல் அ.யேசுராசா அவர்களின் ‘கவிதை’ இதழால் நடாத்தப்பட்ட ‘மஹாகவி நினைவுக் கவிதைப் போட்டி’யில் இவரது கவிதை முதற்பரிசைப் பெறுள்ளது. இதன் தொடர்ச்சியாக இவரது பேட்டியொன்றை கவிதை இதழ் முதலில் பிரசுரித்தது. 1995 இல் வலிகாமம் இடப்பெயர்வினைத் தொடர்ந்த மீள்குடியேற்றத்தின் பின் பல பத்திரிகைகள், ஈழத்தின் அனேகமான சஞ்சிகைகளில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. இலங்கை வானொலியின் இதயசங்கமம், கவிதைக்கலசம் போன்ற நிகழ்ச்சிகளில் இவரது கவிதைகள் வாசிக்கப்பட்டதோடு பல்கலைக்கழகக் காலத்தில் மூன்று ஆண்டுகளும் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மட்ட போட்டிகளில் சிறந்த கவிஞனாக தெரியப்பட்டார்.

இதுவரை இவரது நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ‘கனவுகளின் எல்லை’என்ற தொகுப்பு 2001 இல் வெளிவந்தது. வடகிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சால் வழங்கப்பட்ட சிறந்த கவிதைத் தொகுதிக்கான விருதை இது பெற்றது. ‘கைகளுக்குள் சிக்காத காற்று’ 2004இல் வெளிவந்து இலக்கிய பேரவை பரிசைப் பெற்றது. இத்தொகுப்பு 2004 இல் வெளிவந்ததில் ‘சிறந்த கவிதைத் தொகுதி’ என 26.12.2004ஆம் திகதி வெளிவந்த ‘ஆனந்தவிகடன்’ சஞ்சிகையில் ‘சிறந்தவை 2004' பகுதியில் தமிழக எழுத்தாளர் அமரர் ‘சுஜாதா’ இதனை தெரிவு செய்து இருந்தார். மூன்றாவது தொகுப்பு ‘எழுதாத ஒரு கவிதை’ 2013இல் வெளிவந்தது. நான்காவது தொகுப்பு புயல் மழைக்கு பின்னான பொழுது 2014 ல் வெளிவந்தது. பிரசுரமாகாத ஆயிரக்கணக்கான கவிதைகள் உள்ளன. நல்லூர் பிரதேச கீதம், காரைநகர் பிரதேச கீதம், பூநகரிப் பிரதேச கீதம், தெல்லிப்பளை பிரதேச கீதம், மருதங்கேணி பிரதேச கீதம் என்பன இவரால் இயற்றப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 34


வெளி இணைப்புக்கள்