ஆளுமை:கனகசபாபதி, பூபாலபிள்ளை

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:27, 29 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கனகசபாபதி, ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கனகசபாபதி, பூபாலபிள்ளை (எஸ். பி. கனெக்ஸ்)
தந்தை பூபாலபிள்ளை
தாய் சுந்தரம்மா
பிறப்பு 1945
ஊர் திருக்கோவில், மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பூபாலபிள்ளை கனகசபாபதி மட்டக்களப்பு, திருக்கோவில் எனும் இடத்திலே 1945ம் ஆண்டு பூபாலபிள்ளை, சுந்தரம்மா தம்பதியரின் மகனாக பிறந்தார். இவர் எஸ். பி.செவ்வேள், கதா, கனெக்ஸ், கல்கிதாசன் ஆகிய புனைபெயர்களை கொண்டவர்.

இவர் திருக்கோயில் மெதடிஸ்த மிசன் பாடசாலை, கல்லடி இராமகிருஷ்ண மிசன் சிவானாந்த வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்று பெரதேனியா பல்கலைக்கழகத்திலே கலைமாணிப் பட்டத்தையும் பெற்றார்.

திருஞானவாணி, அறப்போர் அரியநாயகம், கல்கிதாசன் கவிதைகள், தேரோடும் திருக்கோவில் முதலானவை இவரது படைப்புக்களாகும். கனடாவில் வெளிவந்த முதல் சஞ்சிகையான 'எழில்' சஞ்சிகையின் ஆசிரியர்.

இவர் சுவாமி விபுலானந்தர் நினைவுத் தங்கப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டவர். கூத்துக் கலையிலும் ஈடுபாடு கொண்ட இவர் வில்விஜயன் எனும் வடமோடிக் கூத்தை கனடாவில் பழக்கி அரங்கேற்றியவர்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 172-173