ஆளுமை:சுந்தரலிங்கம், பொன்.
பெயர் | சுந்தரலிங்கம், பொன். |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | இசைக் கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பொன்.சுந்தரலிங்கம் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் இசைக் கலைஞர். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சங்கீத பூஷணம் பட்டம் பெற்று ரி.கே.ரங்காச்சாரி, சிதம்பரம் சிவசுப்பிரமணிய பிள்ளை வேணுகோபால ஐயர் போன்றோரிடம் இசை பயின்றவர் ஆவார்.
இலங்கை வானொலியினதும் இலங்கை தொலைக்காட்சி சேவையினதும் அதி உயர் தர கலைஞரான இவர் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா என்ற பல நாடுகளிலும் பிரபல்யத்தைப் பெற்றவர் ஆவார். இவரின் பன்னிரு திருமுறைப் பாடல்கள் 15 ஒலிப்பேழைகளாக வெளிவந்திருக்கின்றன. அத்துடன் ஈழத்து தவில் மேதைகளின் ஏழு தவில்களுடன் யாழ்ப்பாணத்து இசை விழா ஒன்றில் இவர் பாடிய இராகம் தாளம் பல்லவி நிகழ்சி மிகுந்த புகழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் இன்னிசை வேந்தர், சிட்னியில் சுருதிலய மாமணி ,ஜேர்மனியில் தமிழைச் செல்வர் என்பன இவர் பெற்ற கௌரவ பட்டங்களாகும். இவரால் நிர்மாணிக்கப்பட்ட இளம் கலைஞர் மன்ற மண்டபமே இன்று யாழ்ப்பாணத்தின் ஒரே கலா மண்டபமாக மிளிர்கிறது.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 237