ஆளுமை:கனகரெத்தினம், அருளம்பலம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:01, 28 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கனகரெத்தின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கனகரெத்தினம், அருளம்பலம்
தந்தை அருளம்பலம்
தாய் தங்கமுத்து
பிறப்பு 1916
இறப்பு 2000.03
ஊர் புங்குடுதீவு
வகை கல்வியியலாளர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அருளம்பலம் கனகரெத்தினம் புங்குடுதீவு 3ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆரம்பக் கல்வியை ஶ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயத்தில் பயின்று 1932இல் கல்விப் பொதுத் தராதரப் (சா.த)ப் பரீட்சையில் சித்தியடைந்த இவருக்கு பதுளையில் ஆசிரியராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.

1939ஆம் ஆண்டு பதுளையில் ஆசிரியராக பணிபுரிந்த இவர் அங்கு நடந்த பரீட்சையில் உயர் சித்தியடைந்து ஆசிரிய நற்சாட்ச்சிப்பத்திரம் பெற்று 1942 முதல் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் ஏழு வருடங்கள் ஆசிரியராக பதவி வகித்தார். அத்தோடு சித்தி விநாயகர் துரைசாமி வித்தியாலயத்தில் சில காலங்களும் , ஶ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயத்தில் 13 வருடங்களும் கடமை புரியும் வாய்ப்பினைப் பெற்றார். பின்னர் பலாலி ஆசிரிய கலாசாலையில் தேர்ச்சி பெற்றதும் இவருக்கு 1965இல் கிளிநொச்சி வித்தியாலயத்துக்கு அதிபராக பதவி உயர்வு கிடைத்தது.

பலருடைய காணிகளை நில அளவை செய்ய மக்கள் நாடும் போது எவ்வித ஊதியமும் இன்றி நீதி, நேர்மை தவறாது அளவீடு செய்தும் ஏற்படும் பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்தும் வந்தார். அதுமட்டுமன்றி பெருங்காடு முத்துமாரி அம்பாள் ஆலயத்தின் திருவிழா உபயகாரருமாக இருந்து தேவார திருமுறைகளை மிகுந்த பக்தியுடன் பாடி வந்தார். சிறந்ததோர் ஆசானாய், அதிபராய், சமூக சேவகனாய், நில அளவையாளனாய், இறை நாமம் பாடும் ஏந்தலாய் இம் மண்ணில் வாழும் காலம் முழுதும் வாழ்ந்து வந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 196