ஆளுமை:சிவநாயகமூர்த்தி, சுப்பிரமணியம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:07, 21 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிவநாயகமூர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவநாயகமூர்த்தி, சுப்பிரமணியம்
தந்தை சுப்பிரமணியம்
பிறப்பு
ஊர் நெடுந்தீவு
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுப்பிரமணியம் சிவநாயகமூர்த்தி அவர்கள் நெடுந்தீவைச் சேர்ந்த ஓர் கல்வியியலாளர். இவர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் ஆரம்பகால மாணவர் ஆவார். முதல் முதலாக நடைப்பெற்ற இலங்கை கல்வி நிர்வாக சேவைப் போட்டிப் பரீட்சையில் தெரிவான முதலாவது தீவக ஆசிரியர் இவரென்பதும் குறிப்பிடதக்கது.


இவர் இறக்குவானை சென்யோண்ஸ் மகாவித்தியாலயம், நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாசாலை, போன்ற பல பாடசாலைகளில் உதவி ஆசிரியராகவும், நயினாதீவு கணேஷா கனிஷ்ட மகா வித்தியாலயம், உருத்திரபுர மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் அதிபராகவும் பணியாற்றினார். பின்னர் 1975ஆம் ஆண்டு முதல் 1981ஆம் ஆண்டு வரை பண்டாராளை கல்வி மாவட்டத்தில் கல்வி அதிகாரியாகவும், 1981ஆம் ஆண்டு முதல் 1988ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாண கல்வி மாவட்டத்திலுள்ள நல்லூர் கல்வி வட்டாரத்தின் கல்வி அதிகாரியாகவும் கடமையாற்றினார். இவர் மானிப்பாய் இராமநாதன் கல்லூரியிலமைக்கப்பட்ட வலயக் கல்வி காரியாலயத்தில் நிர்வாகத்திற்கு பொறுப்பான கல்வியதிகாரியாக 1988-1989வரை கடமையாற்றியதோடு 1988ஆம் ஆண்டிலிருந்து பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் பதவி உயர்வு பெற்றிருந்தார். கனடாவிலும் 1993ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை ரொறன்ரோ கல்விச் சபையின் கீழ் ஆசிரியராக கடமையாற்றினார். தற்சமயம் இவர் கனடா இலங்கைப் பட்டதாரிகள் சங்கத்தின் துணைச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். இவரால் 2003ஆம் ஆண்டு ரொறன்ரோ கனடாவில் நெடுந்தீவு மக்களும் வரலாறும் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடதக்கது.