ஆளுமை:வேந்தனார், கனகசபைப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:33, 14 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=வேந்தனார் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வேந்தனார் கனகசபைப்பிள்ளை
தந்தை கனகசபைப்பிள்ளை
தாய் தையல்முத்து
பிறப்பு 1916.05.11
இறப்பு 1966.18.09
ஊர் வேலணை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகேந்திரம் பிள்ளை என்ற இயற் பெயரைக் கொண்ட வேந்தனார் தனக்குள்ள தனித்தமிழார்வத்தினால் வேந்தனார் என தனது பெயரை மாற்றிக் கொண்டார். இவர் இளமையில் பயில்கின்ற போதே இந்துசாசனம், ஈழகேசரி போன்ற இதழ்களில் இலக்கிய, சமய கட்டுரைகளை வரைந்ததோடு பின்பு வீரகேசரி, தினகரன், ஈழநாடு, சுதந்திரன் ஆகிய ஏடுகளில் ஆய்வு கட்டுரைகளையும் வழங்கியிருந்தார். வித்துவான் சிறந்த கவிஞராவார் இவர் எழுதிய கவிதைகளை தொகுத்து கவிதைப் பூம்பொழில் என்னும் பெயருடன் ஶ்ரீலங்கா புத்தகசாலை வெளியிட்டுள்ளது. மதுரைச் சங்கத்தில் பண்டிதர் பட்டத்தையும், சைவசித்தாந்த சமாசத்தில் சைவப் புலவர் பட்டத்தையும், சென்னை பல்கலைக்கழகத்தில் வித்துவான் பட்டத்தையும் திருவாடுதுறை ஆதீனத்தாரால் தமிழன்பர் பட்டமும் ஶ்ரீலங்கா சைவாதீனத்தாரால் சித்தாந்த சிரோமணி பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இந்து சமயம், திருநல்லூர்த் திருப்பள்ளி எழுச்சியும் குயிற்றுப்பத்தும், கவிதைப் பூம்பொழில், குழந்தை மொழி, தன்னோர் இலாத தமிழ் போன்ற நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 13-14

வெளி இணைப்புக்கள்