ஆளுமை:சிவசரணம், கந்தையா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:50, 11 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (" {{ஆளுமை| பெயர்=சிவசரணம் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக


பெயர் சிவசரணம் கந்தையா
பிறப்பு 1927.12.27
ஊர் வேலணை
வகை தொழிலதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவசரணம் கந்தையா வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர் ஆவார். இவர் ஆரம்பத்தில் கொழும்பு சென்று தனது உறவினர் ஒருவரின் பழக்கடையில் சிப்பந்தியாகவே தொழில் புரிந்தார். சிறிது காலத்தின் பின்னர் அவர் தனது தம்பிமாரையும் சேர்த்து புகழ் பெற்ற லங்கா ஸ்ரோர்ஸ் எனும் வியாபாரவனத்தை கொழும்பில் நிறுவினார். இந்நிறுவனத்திலே தனது உறவினர், ஊறார், அயலவர் என பலருக்கும் தொழில் வாய்ப்பை வழங்கினார். 1983 இனக் கலவரத்தின் போது இவருடைய ஸ்தாபனம் முற்றாக எரிந்து சாம்பலானது. அதன் பின்னர் யாழ்ப்பாணத்திலே துவாரகா பார்மசி எனும் மருந்தகத்தை தனது சகலன் ஒருவருடன் சேர்ந்து நடத்தினார். இவர் வேலணை பெரியபுலம் முடிப்பிள்ளையார் ஆலய வளர்ச்சியிலும் அதனை ஒட்டிய சமூகத்தின் வளர்ச்சியிலும் ஆர்வமிக்கவராக திகழ்ந்தார் என்பதும் குறிப்பிடதக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 445-450