ஆளுமை:இராசையா, அமிர்தலிங்கம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:06, 11 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (" {{ஆளுமை| பெயர்=இராசையா அம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராசையா அமிர்தலிங்கம்
தந்தை அமிர்தலிங்கம்
தாய் சின்னத்தங்கம்
பிறப்பு 1925.01.15
ஊர் வேலணை
வகை தொழிலதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அமிர்தலிங்கம் இராசையா (1925 ஜனவரி, 15) வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர் ஆவார். இவர் 42 வருடங்களுக்கு மேலாக சிறந்த ஹோட்டல் முதலாளியாக விளங்கியவர். கொழும்பில் பல வருடங்கள் ஜெயலட்சுமி உணவகம், தவளகிரி உணவகம், வூட்லண்ட்ஸ் உணவகம் ஆகியவற்றை திறம்பட நடாத்தி தரமான உணவுவகைகளை வழங்கி, சிறந்த சுத்தமான ஹோட்டல் என்ற பரிசுகளையும் பெற்றுக் கொண்டார். அதுமட்டுமல்லாமல் இவருடைய கடைசி 22 வருட காலம் யாழ்ப்பாணம் மலாயன் கபே யிலேயே கழிந்தது. இவரது சிறந்த நிர்வாகமும், எந்நேரமும் சுறுசுறுப்பாக இயங்கும் தன்மை என்பன எல்லோரையும் கவர்ந்தன. அத்தோடு யாழ் நகரத்திலுள்ள பல பாடசாலைகளுக்கு பரிசளிப்பு விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் போன்றனவற்றிற்கு நிதியுதவி வழங்கியதுடன். தமிழரசுக் கட்சியின் சகலவிதமான போராட்டங்களிலும் பங்கு பற்றி தன்னாலான சகல உதவிகளையும் செய்து தன்னை ஒரு கொள்கைவாதியாகவும் விளங்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 451-452