ஆளுமை:பெருமாள் வேலாயுதர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பெருமாள் வேலாயுதர்
தந்தை சின்னதம்பி வேலாயுதர்
தாய் சின்னாச்சி
பிறப்பு 1880
இறப்பு 1940
ஊர் வேலணை
வகை மருத்துவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வைத்தியர் பெருமாள் என அறியப்படும் வேலாயுதர் பெருமாள் வேலணை, வரணியப்புலத்தை சேர்ந்தவர். இவர் ஆயுர்வேத வைத்தியத்தினை முறையாக கற்று அதிலே புலமை பெற்ற ஒருவராவார். அதிலும் கைநாடி பார்க்கும் முறையிலே அதிகம் பாண்டித்தியம் நிறைந்தவர். அதுமட்டுமல்லாமல் ஏடுகளை ஆய்வு செய்து மூலிகைகளை தேடி எடுத்து மருந்துக்களை தயாரிப்பதிலும் கைதேர்ந்தவராக விளங்கினார். நோயாளர்களின் பிணி தீர்ப்பதற்காக தென் இந்தியாவில் இருந்து வரவழைத்த வைத்திய நிபுணர் ஒருவரின் வழிகாட்டலில் ஆயுர்வேத வைத்திய உலகில் மிக உயர்ந்ததாக பேசப்படும் 'மாத்திரைக்கட்டு' என்னும் மருந்தினை தேவையான மூலிகைகள், மருந்துக்களைப் பெற்று தனது வீட்டிலேயே ஏழு வகைகளில் அதை தயாரித்து புடமிட்டு வைத்திருந்து சிகிச்சயினை மேற்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 386-388