நிறுவனம்:யாழ்/ காரைநகர் சிவகாமி அம்மன் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ காரைநகர் சிவகாமி அம்பாள் சமேத சிதம்பரேஸ்வரர் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் பண்டத்தரிப்பான்புலம், காரைநகர்
முகவரி பண்டத்தரிப்பான்புலம், காரைநகர் மத்தி, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

காரைநகர் சிவகாமி அம்பாள் சமேத ஶ்ரீ சிதம்பரேஸ்வரர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர், பண்டத்தரிப்பான்புலம் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். இவ்வாலயம் சிதம்பரேஸ்வரர் கோயில் என்பதை விட சிவகாமி அம்பாள் ஆலயம் எனவே ஊர்மக்களிடையே வழங்கி வருகின்றது. 1917ம் ஆண்டு வீரகத்தி கந்தப்பரினால் இத்தேவஸ்தானம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. கோவிலானது புதிதாகக் கட்டி விஸ்தரிக்கப்பட்டு முதலாவது கும்பாபிஷேகம் 1927ம் ஆண்டு ஆவணி மாதம் நடாத்தப்பெற்றது. 2000ம் ஆண்டு புரட்டாதி மாதம் 1ம் திகதி சிவன் மூலஸ்தானத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. சிவன் மூலஸ்தானம் இரட்டை பஞ்சாங்க அமைப்பில் கட்டத்தீர்மானிக்கப்பட்டது. அம்மன் மூலஸ்தானமும், மற்ற பரிவார மூர்த்திகளின் மூலஸ்தானங்களும் சீரழிந்து கிடந்ததன் காரணமாக அவையும் மீள கட்டுவதற்காக 2001ம் ஆண்டு ஐப்பசி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. 2003ம் ஆண்டு ஆனி மாதம் 30ம் திகதி எல்லா வேலைகளும் பூர்த்தியாக்கப்பெற்று 09.07.2003 அன்று மகாகும்பாபிஷேகம் செய்யப்பெற்றது.