ஆளுமை:தவராசா, கந்தையா

நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:57, 12 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தவராசா
தந்தை கந்தையா
பிறப்பு 1951.12.01
ஊர் அரியாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தவராசா, கந்தையா (1951.12.01 - ) யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த சிற்பக் கலைஞர். இவரது தந்தை கந்தையா. இவர் யாழ்ப்பாணம் கனகரத்தினம் மகா வித்தியாலயத்தில் இடைநிலைக் கல்வி கற்று யாழ்ப்பாணத் தொழில்நுட்பக் கல்லூரியில் வருகைதரு பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றினார். இவர் இத்தொழில் நுட்பக் கல்லூரியில் 1979 இல் மரவேலைப் பாடத்தில் அதிசிறந்த சான்றிதழைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தந்தையிடம் பதினைந்து வயது முதல் சிற்பக்கலை நுணுக்கங்களைக் கற்றறிந்து நாற்பத்து மூன்று வருடங்களுக்கு மேலான அனுபவம் பெற்றிருக்கின்றார். இவர் சிற்பக்கலையின் தனித்துவத்தையும் அவற்றின் உள்ளடக்கத்தையும் பேணி அவ்வழியில் தனது கலையாற்றலை வெளிப்படுத்தி வருகின்றார். இவர் கொழும்புத்துறை பிள்ளையார் ஆலயத்தின் திருமஞ்சம், அரியாலை நீர்சொச்சிச்தாழ்வு சித்தி விநாயகர் ஆலய கைலாய வாகனம், அரியாலை மகாமாரி அம்மன் பூந்தண்டிகை, அரியாலை சித்தி விநாயகர் ஆலய சப்பை ரதம் ஆகியவற்றை உருவாக்கியதுடன் நல்லூர் கற்பக விநாயகர் ஆலயம், அரியாலை மகாமாரி அம்மன் ஆலயம், சுன்னாகம் ஐயனார் ஆலயம், கொழும்புத்துறை மஞ்சள் பிள்ளையார் ஆலயம், சாவகச்சேரி முருகன் ஆலயம் உட்படப் பல பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு கோவில் வாகனங்களை உருவாக்கிக் கொடுத்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 208
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:தவராசா,_கந்தையா&oldid=405576" இருந்து மீள்விக்கப்பட்டது