ஆளுமை:பொன்னம்பலப்பிள்ளை, பூ.
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:28, 23 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | பொன்னம்பலப்பிள்ளை |
பிறப்பு | 1845 |
இறப்பு | 1890 |
ஊர் | தெல்லிப்பளை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பொன்னம்பலப்பிள்ளை, பூ (1845-1890) தெல்லிப்பளை, கொல்லங்கலட்டியைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவர் மாவை யமக அந்தாதியைப் பாடி சென்னை சித்தாந்த வித்தியாநுபாலன யந்திரசாலையில் 1889 இல் அச்சிடுவித்து வெளியிட்டதுடன் சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆசிரியராகக் கடமையாற்றி உள்ளார்.
சித்திரக்கவி பாடுவதில் ஆற்றல் பெற்ற இவர், 1887 ஆம் ஆண்டு மாவை இரட்டை மணி மாலை என்ற நூலை இயற்றி யாழ்ப்பாணத்தில் வெளியிட்டார். இவரது பல செய்யுட்களையும் கட்டுரைகளையும் அப்போது வெளிவந்த உதயபானுப் பத்திரிகைகளில் காணலாம்.
வளங்கள்
- நூலக எண்: 13940 பக்கங்கள் 132