ஆளுமை:பூபாலபிள்ளை, செ.
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:34, 2 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | பூபாலபிள்ளை |
பிறப்பு | |
இறப்பு | 1967.04.26 |
ஊர் | ஆரையம்பதி |
வகை | ஆசிரியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பூபாலபிள்ளை, செ. ( - 1967.04.26) மட்டக்களப்பு, ஆரையம்பதியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர். இவர் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சி பெற்றுப் பின் தூய செபஸ்தியார் பாடசாலையில் ஆசிரியராகவும் அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளராகவும் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலைத் தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
இவரால் மண்டூர் வடிவேல் முருகன் இரட்டை மணிமாலை, கதிர்காம வடிவேலவர், உழவர் கைந்நூல், திரு முருகன் விளையாடல், யாழ்நூல் தந்தோன், விபுலானந்தர் மணிமொழி நாற்பது முதலான இலக்கிய நூல்கள் எழுதி வெளியிடப்பட்டன.
வளங்கள்
- நூலக எண்: 3771 பக்கங்கள் 81