ஆளுமை:சுந்தரராஜ ஐயங்கார், அ. சே.

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:07, 1 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுந்தரராஜ ஐயங்கார்
பிறப்பு 1899
ஊர் திருச்சி
வகை கலிவியியலாளர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுந்தரராஜ ஐயங்கார், அ. சே. (1899 - ) திருச்சி, அன்பிலைச் சேர்ந்த ஆசிரியர், எழுத்தாளர். இவர் திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் வரலாற்றுப் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பரமேஸ்வராக் கல்லூரி, இராமநாதன் கல்லூரி ஆகியவற்றில் தமிழாசிரியராய்ப் பணியாற்றிய இவர், 1922 முதல் 42 ஆண்டுகள் யாழ்ப்பாணத்தில் பணியாற்றியுள்ளார்.

கம்பன் கவிதைக் கோவை 1-3, இராம காதை (சுருக்கம்), நளன் சரிதம் (சுருக்கம்), தமிழ் அமுதம், வில்லி பாரதம் (சுருக்கம்), கம்பராமாயண அகராதி 1-5, கம்பரும் உலகியலும் ஆகியன இவரது நூல்களாகும். இவற்றில் பல நூல்கள் சென்னை, அண்ணாமலை, இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருந்தன. இலங்கை வானொலியில் பல இலக்கியப் பொழிவுரைகளை நிகழ்த்தியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4413 பக்கங்கள் 01-07