ஆளுமை:சிவராசசிங்கம், வல்லிபுரம்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:20, 31 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவராசசிங்கம்
தந்தை வல்லிபுரம்
பிறப்பு 1931.04.01
ஊர் கரவெட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவராசசிங்கம், வல்லிபுரம் (1931.04.01 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வல்லிபுரம். தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம் போன்றனவற்றில் பாண்டித்தியம் உடையவரான இவர், பாடசாலைக் காலங்களிலிருந்து பல நூல்களை வெளியிட்டுள்ளதோடு அரச மொழித் திணைக்களத்தில் உயர் பதவியும் வகித்துள்ளார்.

இவர் தமிழ் வழி ஆங்கிலம், கந்தபுராண சூரபத்மன் வதைப்படலம், நயினை நாகபூஷணி அம்மை பிள்ளைத்தமிழ், கொக்குவில் கிருபாகரமூர்த்தி பிள்ளைத்தமிழ், வல்லிபுர மாயன் கோவை, தெகிவளை நெடுமால் கோவை, யாக்கரு அந்தாதி, கனகை விநாயகர் பிள்ளைத்தமிழ், அல்வாய் முத்துமாரி அம்மன் பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

இவருடைய நயினை நாகபூசணி அம்மன் பிள்ளைத்தமிழுக்குச் சாகித்திய அக்கடமி விருது கிடைத்துள்ளதோடு பிள்ளைக்கவி, உரை விற்பன்னர் ஆகிய பட்டங்களைப் பண்டிதமணி. சி. கணபதிப்பிள்ளையால் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 20