ஆளுமை:சிவசண்முகமூர்த்தி, நடேசன்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:57, 31 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவசண்முகமூர்த்தி
தந்தை நடேசன்
பிறப்பு 1942.02.08
ஊர் சுழிபுரம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவசண்முகமூர்த்தி, நடேசன் (1942.02.08 - ) யாழ்ப்பாணம், சுழிபுரத்தைச் சேர்ந்த இசைக்கலைஞர். இவரது தந்தை நடேசன். திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகளிடம் பயின்று சங்கீதக் கதாப்பிரசங்கம், நாட்டார் சொற்பொழிவு, கவிதை, வில்லுப்பாட்டு, கிராமிய நாடகங்கள் போன்ற துறைகளில் ஈடுபட்டார். இவர் இலங்கை வானொலியில் 'கிராமச் சஞ்சிகை' நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

இவர் 1986 இல் மலேசியாவிலும் 2001 இல் பிரான்ஸ், ஜேர்மன், சுவிஸ் ஆகிய நாடுகளிலும் கதாப்பிரசங்கங்களை நிகழ்த்தியுள்ளார். இவர் இந்து சமயக் கலாச்சாரத் திணைக்களத்தினால் 'கலைஞான கேசரி' விருதையும் கொழும்பு சர்வதேச இந்துமத குருபீடத்தினால் 'சிவநெறிக் கலாநிதி' விருதையும் யாழ்ப்பாண இந்து சமயப் பேரவையால் 'சிவ கலாபூஷணம்' விருதையும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 61