ஆளுமை:குணரத்தினம், செல்லையா
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:11, 5 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | குணரத்தினம் |
தந்தை | செல்லையா |
பிறப்பு | |
ஊர் | மட்டக்களப்பு |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
குணரத்தினம், செல்லையா மட்டக்களப்பு, அமிர்தகழியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை செல்லையா. அமிர்தகழி ஶ்ரீ சித்திவிநாயகர் வித்தியாலயத்திலும் மட்டக்களப்பு அரசடி மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றார். தொடர்ந்து வாழைச்சேனை காகித ஆலையில் இலிகிதராகக் கடமையாற்றினார்.
இவர் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட கவிதைகளையும் ஐந்நூறுக்கும் மேற்பட்ட மெல்லிசைப் பாடல்களையும் எழுதியுள்ளார். துன்ப அலைகள் குறுநாவலையும் சொந்தம் எப்போதும் தொடர்கதை தான், ஒரு கிராமம் தலை நிமிர்கிறது நாவல்களையும் எழுதியுள்ளார். இவர் தமிழ்மணி, இலக்கியமணி, ஆளுநர் விருது, கலாபூஷணம், இலக்கியவேந்தர் ஆகிய பட்டங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 2081 பக்கங்கள் 03-04