ஆளுமை:சண்முகலிங்கன், நாகலிங்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சண்முகலிங்கன்
தந்தை நாகலிங்கம்
தாய் நகுலேஸ்வரி
பிறப்பு
ஊர் தெல்லிப்பளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகலிங்கன், நாகலிங்கம் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட பேராசிரியர்; சமூகவியளார்; எழுத்தாளர்; நடிகர்; பாடகர். இவரது தந்தை நாகலிங்கம்; தாய் நகுலேஸ்வரி. இவர் ஆரம்பக்கல்வியை யாழ்ப்பாணம் மயிலிட்டி ஞானோதயா வித்தியாசாலையிலும், உயர் கல்வியை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிலும் கற்றார். பின்னர் இளமாணிப் பட்டப்படிப்பினை கொழும்பு பல்கலைக்கழகத்தில் பயின்று முதல் வகுப்பில் சித்தி அடைந்து முதுமாணிப் பட்டத்திற்கான ஆய்வுப் பயிற்சியை பிலிப்பைன்ஸ் நாட்டின் அற்றனையோடீ மணிலா பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொண்டார்.

இவர் பேராசிரியர் கா. கைலாசபதி அவர்கள் கலைப்பீடாதிபதியாக இருந்த காலத்தில் 1981ஆம் ஆண்டு உதவி விரிவுரையாளராக பணியை ஆரம்பித்தார். 2007, டிசம்பர் 28 முதல் 2011, மார்ச் 31 வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும் பணியாற்றினார். தற்போது சமூகவியல் துறையின் தலைவராக பணியாற்றிவருகின்றார்.

சமூகவியல் பேராசிரியரான இவர் என் அம்மாவின் கதை, என் அப்பாவின் கதை, இதயரஞ்சனி, வானொலிச்சித்திரங்கள், சந்தனமேடை, நாகரிகத்தின் நிறம், மரபுகளும் மாற்றங்களும், சமூக மாற்றத்தில் பண்பாடு, பண்பாட்டின் சமூகவியல், தொல்சீர் சமூகவியல் சிந்தனையாளர், சான்றோன் எனக்கேட்ட தாய், ஊழித்தாண்டவம், Cult Murukan in Eastern Srilanka, A New Face of Durga,Kalinga Publications போன்ற பல நூல்களை இவர் வெளியிட்டுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 71
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 153
  • நூலக எண்: 14418 பக்கங்கள் 03-05