ஆளுமை:சுந்தரலிங்கம், வேலுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுந்தரலிங்கம்
தந்தை வேலுப்பிள்ளை
தாய் பராசக்தி
பிறப்பு 1938.06.08
இறப்பு 2014.08.06
ஊர் நெடுந்தீவு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுந்தரலிங்கம், வேலுப்பிள்ளை (1938.06.08 - 2014.08.06) யாழ்ப்பாணம், நெடுந்தீவை பிறப்பிடமாக கொண்ட இசைக் கலைஞர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. இவர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் சங்கீத வித்துவான் வானொலி புகழ் திரு. பாலசிங்கம், திரு. கதிரவேலு ஆகியோரிடம் முறையாக சங்கீதம் கற்று, பின்னர் அண்ணாமலை பல்கலைகழகத்தில் பயின்று சங்கீத பூஷணம் பட்டம் பெற்றார். 1974ஆம் ஆண்டிலிருந்து நெடுந்தீவு மகாவித்தியாலயம், புத்தூர் சோமஸ்கந்தாக் கல்லூரி, கொட்டடி நமசிவாய வித்தியாலயம் ஆகியவற்றில் சங்கீத ஆசிரியராக பணியாற்றி 1990ஆம் ஆண்டில் ஓய்வுபெற்றார்.

இலங்கையின் பல பாகங்களிலும் இசை கச்சேரிகளை நிகழ்த்தியுள்ள இவர் கலாபூஷணம் விருது வழங்கப்பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 149
  • நூலக எண்: 5857 பக்கங்கள் 05
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 66