ஆளுமை:தமிழோவியன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தமிழோவியன்
பிறப்பு
இறப்பு 2006.12.25
ஊர் தெளிவத்தை, பதுளை
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆறுமுகம், இரா. ( - 2006.12.25) தமிழோவியன் என்ற பெயரால் நன்கறியப்படுபவர்; பதுளை, தெளிவத்தையைச் சேர்ந்த கவிஞர். ஊவா மாகாணத்தில் பல இலக்கிய விழாக்களையும் நாடகங்களையும் இளமைக் காலத்திலிருந்தே நடாத்திவந்தார். கவிஞர் கண்ணதாசன், நெடுஞ்செழியன் போன்றவர்களை பதுளைக்கு அழைத்து இலக்கிய விழாக்களை நடத்தினார்.

கரும்புத் தோட்டத்தில் பெண்கள் படும் வேதனைகளையும் மலையகத்தொழிலாளர்கள் படும் அவலங்களையும் இவரது கவிதைகளில் எடுத்துக்காட்டியுள்ளார். இவரது 'தமிழோவியன் கவிதைகள்' தொகுப்பு இலங்கை சாகித்திய மண்டல விருதினைப் பெற்றுள்ளது. இவரது கவி ஆளுமைக்காய் காலாபூஷணம், தமிழ்மணி, கவிமணி போன்ற பட்டங்களை பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 1741 பக்கங்கள் 88-93
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:தமிழோவியன்&oldid=166872" இருந்து மீள்விக்கப்பட்டது