ஆளுமை:மோகனதாஸ், ஆனந்தன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மோகனதாஸ்
தந்தை ஆனந்தன்
தாய் சத்தியபாமா
பிறப்பு 1959.06.13
ஊர் பதுளை, பிட்டரத்மலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மோகனதாஸ், ஆனந்தன் (1959.06.13 - ) பதுளை, பிட்டரத்மலையைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். இவரது தந்தை ஆனந்தன்; இவரது தாய் சத்தியபாமா. இவர் ஆரம்பக் கல்வியை மாத்தளை சங்கமித்தை மகளிர் வித்தியாலயத்திலும் இடைநிலை, உயர்தரக் கல்வியை மாத்தளை இந்து மகா வித்தியாலயத்திலும் பயின்றார். கணித, விஞ்ஞானப் பயிற்றப்பட்ட ஆசிரியரான இவர், தேசியத் தொலைக் கல்வி நிறுவனத்தில் பயிற்சி பெற்றவராவார்.

இவரால் 1990 ஆம் ஆண்டு தயாரித்து முதல் மேடையேற்றப்பட்ட நாடகம் எண்ணங்கள் மாறுமா? என்பதாகும். இதுவரை முப்பத்துக்கும் மேற்ப்பட்ட நாடகங்களை தயாரித்து நெறிப்படுத்தி இவர் மேடையேற்றியுள்ளார். அவற்றுள் ஊர்வலங்கள் ஓயுமா, விடிஞ்சிருச்சி, விழுதுகள் வேறாகுமா போன்றன குறிப்பிடத்தக்கவை. நாடகத்துறையைப் போலவே எழுத்துத்துறையிலும் இவருக்கு ஈடுபாடு உண்டு. 1985ஆம் ஆண்டு சிந்தாமணியில் சந்தாப் பணங்களில் வாழும் தொழிற்சங்கங்கள் எனும் ஆக்கத்தை எழுதி எழுத்துத்துறையில் அறிமுகமான இவர் இதுவரை நூற்றுக்கும் மேற்ப்பட்ட கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என்பனவற்றை எழுதி உள்ளார். 1995ஆம் ஆண்டு ஊவா மாகாண இந்து கலாசார அமைச்சு நடத்திய தமிழ் சாஹித்திய விழாவில் இவரது சிறுகதை இரண்டாம் இடத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 13943 பக்கங்கள் 168-171