ஆளுமை:மகாலிங்கசிவம், வேற்பிள்ளை
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:15, 3 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | மகாலிங்கசிவம், ம. வே. |
தந்தை | வேற்பிள்ளை |
தாய் | மகேஸ்வரி |
பிறப்பு | 1891 |
இறப்பு | 17.02.1941 |
ஊர் | மாவிட்டபுரம் |
வகை | கல்வியியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வே. மகாலிங்கசிவம் (1891 - 1941.02.17) யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தைச் சேர்ந்த கல்வியியலாளர், கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர். இவரது தந்தை ம. க. வேற்பிள்ளை; தாய் மகேஸ்வரி. ஆரம்பத்தில் இவர் தனது கற்றல் நிறைவு பெற்றதும் இவரது தந்தையாரால் ஆரம்பிக்கப்பட்ட காவிய பாடசாலையிலேயே இலக்கிய, இலக்கணங்களைக் கற்பித்து வந்தார். பின்னர் 1922 இலிருந்து தான் இறக்கும் வரை ஏறத்தாழ பதினேழு வருடங்கள் இவர் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் விரிவுரையாளராக கடமையாற்றினார்.
இவர் பல கவிதைகளையும், சிறுகதைகளையும் படைத்துள்ளார் ஆனபோதும் அன்னை தயை எனும் சிறுகதைத்தொகுப்பு ஒன்றே இன்று கிடைக்கின்றது. இவர் குருகவி எனவும், கற்பனைச் சுருக்கம் எனவும் அறிஞர்களால் போற்றப்பட்டவர்.
வளங்கள்
- நூலக எண்: 13940 பக்கங்கள் 105
- நூலக எண்: 2443 பக்கங்கள்
- நூலக எண்: 963 பக்கங்கள் 180-181