ஆளுமை:குமாரசுவாமிப்புலவர், அம்பலவாணபிள்ளை
பெயர் | குமாரசுவாமிப்புலவர், அம்பலவாணபிள்ளை |
தந்தை | அம்பலவாணபிள்ளை |
பிறப்பு | 1855 |
இறப்பு | 1922 |
ஊர் | சுன்னாகம் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அ. குமாரசுவாமிப்புலவர் (1855 - 1922) யாழ்ப்பாணம், சுன்னகத்தைச் சேர்ந்த எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். இவரது தந்தை அம்பலவாணபிள்ளை. இவர் இளமைக் காலத்தில் மல்லாகத்தில் அமைந்திருந்த ஆங்கில வித்தியசாலையிலும், அவ்வூரில் வாழ்ந்த முருகேச பண்டிதரிடமும் கல்வி பயின்றார்.
1878ஆம் ஆண்டு சி. வை. தாமோதரம்பிள்ளை தாம் ஏழாலையில் நிறுவிய தமிழ்ப் பாடசாலையில் ஆசிரியராக நியமித்துக் கொண்டார். சிறிது காலத்தின் பின் இவரே இப் பாடசாலையின் தலமையாசிரியராக விளங்கினார். பின்னர் ஆறுமுக நாவலர்களால் நிறுவப்பட்ட வண்ணார்பண்ணைச் சைவப்பிரகாச வித்தியாசாலையில் தலமையாசிரியராக பணியாற்றினார்.
மேகதூதக் காரிகை, இராமோதந்தம், சாணக்கிய நீதிவெண்பா ஆகியவை இவர் சமஸ்கிருதத்திலிருந்து மொழிப்பெயர்த்தியற்றிய நூல்களாகும். தமிழ்ப் புலவர் சரிதம், வினைப்பகுபத விளக்கம், சிசுபால சரிதம், இதோபதேசம், இலக்கியச் சொல்லகரதி, சிவதோத்திர கவித்திரட்டு, இரகுவம்ச சரிதாமிர்தம், ஏகவிருத்த பாரதி, மாவைப் பதிகம், இலக்கண சந்திரிகை, கலைசைச் சிலேடை வெண்பா - அரும்பதவுரை, கம்பராமாயணம் - பாலகாண்டம் - அரும்பதவுரை, நீதிநெறி விளக்கம் - புத்துரை, தண்டியலங்காரம் - புத்துரை, யாப்பருங்கலக்காரிகை - புத்துரை போன்றன இவர் இயற்றிய நூல்களாகும்.
வளங்கள்
- நூலக எண்: 3003 பக்கங்கள் 139-157
- நூலக எண்: 963 பக்கங்கள் 88-90