ஆளுமை:ஈழத்துப் பூதந்தேவனார், ஈழத்துப் பூதன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஈழத்துப் பூதந்தேவனார்
பிறப்பு
ஊர்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஈழத்துப் பூதந்தேவனார் சங்ககாலத்துப் புலவர். ஈழநாட்டிலிருந்து பாண்டியநாடு சென்று மதுரைச் சங்கத்தில் புலவராய் திகழ்ந்தார். இவர் தனது தந்தையாகிய ஈழத்துப் பூதனோடு மதுரை சென்று, கற்று புலவரானார் என்றும் கூறப்படுகின்றது. ஈழத்து பூதந்தேவனார் என்னும் பெயர் நற்றிணையிலுங் குறுந்தொகையிலும் செய்யுள் முகப்பில் காணப்படுகின்றது. சங்க நூல்களில் இவர் பாடியவனவாக அகநானூறு: 88, 231, 307, குறுந்தொகை: 189, 343, 360, நஃறினை: 366 ஆகிய ஏழு பாடல்கள் காணப்படுகின்றன.

ஈழ நாட்டைச் சேர்ந்த புலவரான ஈழத்துப் பூதந்தேவனார் கி.பி. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்கள் பல சான்றுகளை முன்வைத்து 1998 இல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நினைவுப் பேருரை ஒன்றை நிகழ்த்தியமை குறிப்பிடத் தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 50

வெளி இணைப்புக்கள்