ஆளுமை:பாலச்சந்திரன், செல்லையா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாலச்சந்திரன், செல்லையா
தந்தை செல்லையா
பிறப்பு 1959.03.28
ஊர் புத்தூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செ. பாலச்சந்திரன் (1959.03.28 - ) யாழ்ப்பாணம் புத்தூரைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட சிற்பக் கலைஞர். இவரது தந்தை செல்லையா. ஆலயங்களுக்குரிய வாகனங்கள், சித்திரத்தேர்கள், மஞ்சங்கள், சப்பைரதங்கள், நிர்மாணிப்பதில் வல்லவரான இவர் சிற்பக் கலையை தொழிலாகக் கொண்டு செயற்பட்டுவருகின்றார்.

பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வர் ஆலயம், நீர்வேலி கந்தசுவாமி கோவில், அல்வாய் மாலிசந்திப் பிள்ளையார் ஆலயம், நல்லூர் மூத்த விநாயகர் ஆலயம், சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்பாள் ஆலயம், உரும்பிராய் கற்பக விநாயகர் ஆலயம் போன்றவற்றின் சித்திரத்தேர்கள், சப்பைரதங்கள், கைலாய வாகனங்கள் இவரின் கைவண்ணத்தை காட்டி நிற்கின்றன.

இளங்கலைமாமணி, பார்வத சிற்பபாலன், சிற்பரதகலாசம்கிரகர், சிற்பகலாரத்தினம், ரத நிர்மாண சிம்மம், சிற்பானந்த பானு, ரதகலாசூரி, ரதகலா அருவி, ரதகலாஞானி என்னும் பட்டங்களை ஆலய நிர்வாகங்கள், பிரதேச செயலகங்களும் இவருக்கு வழங்கிக் கௌரவித்துள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 210