ஆளுமை:யசோதரன், சின்னத்துரை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யசோதரன், சின்னத்துரை
தந்தை சின்னத்துரை
பிறப்பு 1973.05.09
ஊர் நல்லூர்
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சி. யசோதரன் (1973.05.09 - ) யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை சின்னத்துரை. இக் கலைஞர் பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் பயின்று பயிற்றப்பட்ட ஆசிரியராக வெள்யேறி ஆசிரியப் பணியாற்றுகின்றார். இவர் 1993ஆம் ஆண்டு முதல் 1998ஆம் ஆண்டு வரை மரபு வழி நுட்பங்களை பின்பற்றி பல ஆயிரக்கணக்கான ஓவியங்களை வரைந்துள்ளார். 1998ஆம் ஆண்டிற்கு பின்னர் நவீன முறையில் பல நூற்றுக் கணக்கான ஓவியங்களை வரைந்துள்ளார்.

கவிதை எழுதுவதிலும் ஆற்றல் கொண்டவரான இவருக்கு 1991ஆம் ஆண்டு நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் கவிஞர் பட்டம் வழங்கிக் கௌரவித்தது. யாழ்ப்பாண ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் இவருக்கு பிரதேச பண்டிதர் என்னும் திவ்ய நாமத்தைச் சூட்டிக் கௌரவித்தது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 198