ஆளுமை:பிச்சையப்பா, பெரியசாமி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பிச்சையப்பா, பெரியசாமி
தந்தை பெரியசாமி
பிறப்பு 1933.03.27
இறப்பு 2003.05.13
ஊர் நவின்டில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பெ.பிச்சையப்பா (1933.0327 - 2003.05.13) யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை பெரியசாமி. நல்லை ஆதீனத்தின் முதலாவது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமி நாத தம்பிரான் சுவாமிகளின் சங்கீத கதாப்பிரசங்கத்திற்கு முப்பத்தைந்து வருடங்கள் முகவீணை இசைத்து பக்க வாத்தியக் கலைஞராக செயற்பட்ட பெருமை இவருக்கு உண்டு. அத்தோடு இலங்கையின் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் முதல்தர நாதஸ்வர கலைஞராக முப்பது வருடங்கள் சேவையாற்றியுள்ளார். முகவீணையிலும் அதிசிறந்த பக்கவாத்தியக் கலைஞராக இவர் இருந்துள்ளார்.

இவரது நாதஸ்வர இசைக்கு 1972ஆம் ஆண்டு திருகோணமலை பன்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய தேவஸ்தான நிர்வாகம் இவரைப் பாராட்டி இசை ராகஞான வாருதி என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது. மேலும் கெக்கிராவை பிள்ளையார் ஆலயத்தில் இவரது நாதஸ்வர நிகழ்ச்சி 1974ஆம் ஆண்டு நடைப்பெற்றபோது அவ் ஆலயத்தின் நிர்வாகம் இவரை கௌரவித்து இன்குழல் வேந்தன் என்ற பட்டத்தையும், நல்லை பால கதிர்காம நிர்வாகம் மதுரகான கலைச்செம்மல் என்கின்ற பட்டத்தையும், நல்லை ஆதீனம் நாதஸ்வர இளவரசு பட்டத்தையும், யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றம் இசைநாவேந்தன் என்ற பட்டத்தையும் வழங்கிக் கௌரவித்துள்ளன. இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கலைக்கான தேசிய விருதான கலாபூஷணம் விருதையும் 2002ஆம் ஆண்டு இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 90