ஆளுமை:பத்மநாதன், சோமசுந்தரம்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:52, 30 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பத்மநாதன், சோமசுந்தரம்பிள்ளை.
தந்தை சோமசுந்தரம்பிள்ளை
பிறப்பு
ஊர் வண்ணார்ப்பண்ணை
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சோ. பத்மநாதன் (பி. 1939, செப்டம்பர் 14) யாழ்ப்பாணம் வண்ணார்ப்பண்ணையை பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கவிஞர், எழுத்தாளர். இவரது ததையாரின் பெயர் சோமசுந்தரம்பிள்ளை. இவர் சிறப்புக் கலைமாமணி, டிப்ளோமா இலக்கியம், டிப்ளோமா கல்வி ஆகிய பட்டங்களைப் பெற்றதோடு பலாலி ஆசிரியர் கலாசாலையின் முன்னாள் அதிபராகவும் கடமையாற்றியுள்ளார்.

இவரது முதற் கவிதைத் தொகுதி வடக்கிருத்தல் (1998) ஆகும். அதனைத் தொடர்ந்து நினைவுச் சுவடுகள் (2006), நல்லூர் முருகன் காவடிச் சிந்து (1996) போன்ற கவிதைகளைப் படைத்ததோடு, ஆபிரிக்க கவிதை (2001), தென்னிலங்கை கவிதை (2003) ஆகிய இரு நூல்களோடு குழந்தை ம.சண்முகலிங்கத்தின் மூன்று நாடகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் வெளியிட்டுள்ளார். இவருக்கு இருமுறை மாகாணப் பரிசும், ஒருதடவை சாகித்திய மண்டலப் பரிசும், ஆளுநர் விருதும், நல்லூர் பிரதேச கலாசாரப் பேரவையின் கலைஞானச் சுடர் பட்டமும் கிடைத்துள்ளன.


வளங்கள்

  • நூலக எண்: 10202 பக்கங்கள் 14-16
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 24


வெளி இணைப்புக்கள்

இவற்றையும் பார்க்க