ஆளுமை:தம்பித்துரை, ஆறுமுகம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தம்பித்துரை
தந்தை ஆறுமுகம்
பிறப்பு 1932
இறப்பு 1994
ஊர் யாழ்ப்பாணம்
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தம்பிதுரை, ஆறுமுகம் (1932-1994) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓவியர், சிற்பி. மரச் சித்திரங்கள் செதுக்குவதிலும், தேர் கட்டுவதிலும் இவர் சிறந்த புலமை பெற்றவரெனினும், தொழில் முறையில் இவர் ஒரு ஓவியர். எஸ்.ஆர்.கனகசபையின் “வின்சர் ஆட் கிளப்“ பில் சித்திரம் பயின்று 1954இல் சித்திர ஆசிரிய தராதரப் பத்திரப் பரீட்சையில் சித்தியடைந்து 1955இல் மகாஜனக் கல்லூரியில் சித்திர ஆசிரிய நியமனம் பெற்றார். 1968ஆம் ஆண்டு சித்திர வித்தியாதிகாரியாக உயர்வுபெற்றார். இவரது கலையாற்றலிற்காக கலாகேசரி, கலாபூசனம், இராஜஸ்தபதி, இரதச்சக்கரவர்த்தி, சிற்பக்கலாதிலகம் போன்ற கெளரவங்களும் வழங்கப்பட்டுள்ளது.

சித்திரம் தொடர்பாக பல கட்டுரைகளை எழுதியுள்ள இவரது ஆக்கங்களில் சிறுவர் சித்திரம், ஓவியக் கலை என்ற இரு நூல்களும் குறிப்பிடத்தக்கவையாகும். மற்றும் யாழ்ப்பாணத்துப் பிற்கால சுவரோவியங்கள் என்ற நூல் யாழ்ப்பாண பிரதேசத்தின் ஓவிய வரலாற்றின் ஒரு பகுதியை பதிவு செய்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 2970 பக்கங்கள் 38-39

வெளி இணைப்பு