ஆளுமை:கனகசபாபதி, கந்தையா
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:36, 28 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | கனகசபாபதி, கந்தையா |
தந்தை | கந்தையா |
பிறப்பு | 1915 |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | ஓவியவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கந்தையா கனகசபாபதி அவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓர் ஓவியர். பலாலி ஆசிரியபயிற்சிக் கலாசாலையில் 1952ஆம் ஆண்டிலிருந்து ஓவிய போதனாசிரியராகவிருந்த இவர் 1971இல் ஓய்வு பெற்றார். எஸ்.ஆர்.கேயின் அபிமான மாணவரான இவர் முறையான ஓவியப் பயிற்சியை வின்ஸர் ஆட்கிளப்பில் பெற்றார். வின்ஸர் ஆட்கிளப்பில் மாணவனாயும் பின்னர் ஆசிரிய கலாசாலையில் ஓவிய விரிவுரையாளராகவும் இருந்த காலத்திலேயே இவரது ஓவியங்களில் பெரும்பாலானவை வரையப்பட்டன.
இவரது நிகழ்ச்சித் சித்தரிப்பு ஓவியங்களில் இளைப்பாறுதல், மாவிடித்தல், இரு பெண்கள் என்பன குறிப்பிடத்தக்கவை. நிலைப்பொருள் ஓவிய வரைவிலும் தன் ஆளுமையை வெளிக்காட்டிய கனகசபாபதியின் ஓவியங்களில் தைலவர்ணத்தில் 1947இல் வரையப்பட்ட பூங்கொத்து ஓவியம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
வளங்கள்
- நூலக எண்: 2970 பக்கங்கள் 31-32