ஆளுமை:இராசையா, அம்பலவாணர்

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:41, 28 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இரசையா, அம்பலவாணர்.
தந்தை அம்பலவாணர்
தாய் 1926
பிறப்பு 1991
ஊர் யாழ்ப்பாணம்
வகை ஓவியவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அம்பலவாணர் இராசையா அவர்கள் யாழ்ப்பணத்தைச் சேர்ந்த ஓர் ஓவியர். வின்ஸர் ஆட்கிளப்பின் முதல் மாணவரான இவர் தனது ஆயுட்காலம் முழுவதும் அதனுடன் தொடர்பு கொண்டு இயங்கினார். கொழும்பு கலாபவனத்தில் பல வருடங்கள் அங்கத்தவராக இருந்ததுடன் கலாபவனம் நடத்திய ஓவியக்காட்சிகள் பலவற்றில் பங்குப் பற்றியுள்ளார்.

1945இல் உணவுற்பத்திப் போதனாசிரியராக ஏழாலை அரசாங்க பாடசாலையில் நியமனம் பெற்ற இவர் பின்னர் வெலிமடை அரசினர் பாடசலையிலும், வேலணை மத்திய மகாவித்தியாலயத்திலும் கடமையாற்றி 1969இல் கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலை ஓவிய விரிவுரையாளராக நியமனம் பெர்று 1972இல் ஓய்வுப் பெற்றார்.

இவர் அதிகமான நிலக்காட்சி ஓவியங்களை வரைந்துள்ளார். இவரது கலைப் பெறுமானமுள்ள ஓவியப் படைப்புக்கள் வின்சர் ஆட்சிகிளப் காலத்திலிருந்து அவர் கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலை விரிவுரையாளராக இருந்த காலப்பகுதிக்குரியனவாகும். பிரதிமை ஓவியம், நிலைப்பொருள் ஓவியம், நிலக்காட்சி என்ற முப்பிரிவிலும் தன் ஓவிய ஆளுமையை வெளிப்படுத்திய இவரது ஆக்கங்களில் முதன்மைப் பெறுவது கோயிற் காட்சிகள் ஆகும்.

வளங்கள்

  • நூலக எண்: 2970 பக்கங்கள் 28-29