ஆளுமை:ஜோர்ஜ் ஜீவரெத்தினம், காத்தமுத்து
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:44, 1 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | ஜோர்ஜ் ஜீவரெத்தினம் |
தந்தை | காத்தமுத்து |
தாய் | சின்னத்தங்கம் |
பிறப்பு | 1939.11.23 |
இறப்பு | 1977.10.20 |
ஊர் | மட்டக்களப்பு, துறைநீலாவணை |
வகை | கவிஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஜோர்ஜ் ஜீவரெத்தினம், காத்தமுத்து (1939.11.23-1977.10.20) மட்டக்களப்பு, துறைநீலாவணையைச் சேர்ந்த கவிஞர், விளையாட்டு வீரர். இவரது தந்தை காத்தமுத்து; இவரது தாய் சின்னத்தங்கம். இவர் ஜீவா ஜீவரெத்தினம் என்னும் புனைபெயர் கொண்டவர். இவர் தனது ஆரம்பக் கல்வியை துறைநீலாவணை மெ. மி. பாடசாலையிலும் மட்டக்களப்பு அரசினர் மத்திய கல்லூரியிலும் உயர்கல்வியைக் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையிலும் மேற்படிப்பை நல்லூர் அரசினர் ஆசிரியர் கலாசாலையிலும் பெற்றுக் கொண்டார்.
இவர் மலையகத்தில் ஆசிரியராகப் பணியாற்றியதுடன் 50களின் பிற்பகுதியில் கவிதைகள் எழுதத் தொடங்கினார். இவரது வாழும் கவிதை என்ற கவிதை நூல் 60களின் பிற்பகுதியில் வெளிவந்தது.
வளங்கள்
- நூலக எண்: 3771 பக்கங்கள் 105-108