ஆளுமை:திருஞானசம்பந்தன், நாகலிங்கம்

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:28, 6 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் திருஞானசம்பந்தன், என்.
தந்தை நாகலிங்கம்
தாய் பொன்னம்மா
பிறப்பு 1916
ஊர் காரைநகர்
வகை வைத்தியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

காரைநகர் வலந்தலையைச் சேர்ந்த நாகலிங்கம், பொன்னம்மா தம்பதியரின் மூத்தமகனான திருஞானசம்பந்தன் 1916ம் ஆண்டு மலேசியாவில் பிறந்தார். வைத்தியரான திருஞானசம்பந்தன் டாக்டர் என். ரி. சம்பந்தன் என அழைக்கப்பட்டார்.

இவர் தனது ஆரம்பக்கல்வியை மலேசியாவில் புனித ஜோர்ஜ் பாடசாலையில் கற்றார். பின் இலங்கை வந்து கல்கிசை புனித தோமஸ் கல்லூரியில் உயர் கல்வியைக் கற்று 1943ல் வைத்தியகலாநிதிப் பட்டத்தைப் பெற்றார். அதன் பின் வைத்தியத்துறையில் F.R.C.S. (Ed in), FRCS (GLAS) ஆகிய பட்டங்களை 1946ல் பெற்றார்.

இதன் பின் 1943-1944 வரை கண்டி அரசினர் வைத்தியசாலையில் பணிபுரிந்தார். பின் யாழ்ப்பாண மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற விருப்பில் 1944ம் ஆண்டு மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் இணைந்து 30வருடங்களுக்கு மேலாக சேவையாற்றியிருந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 322-324