ஆளுமை:சண்முகம், நாகலிங்கம்
பெயர் | சண்முகம், நாகலிங்கம் |
தந்தை | நாகலிங்கம் |
தாய் | சின்னத்தாய் |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | வர்த்தகர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நாகலிங்கம் சண்முகம் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். இவருக்கு கொழும்பு 4ஆம் குறுக்குத் தெருவில் வர்த்தக நிலையம் ஒன்று இருந்தது அதன் பெயர் ரத்கம ஸ்ரோர்ஸ் அகும். அதன் உரிமையாளராகையால் இவர் ரத்கம சண்முகம் என அழைக்கப்பட்டார்.
இவர் தனிமனிதனாக தனது சொந்த செலவில் புங்குடுதீவு சிவன் கோவிலின் இராஜகோபுரத்தை கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு இக் கோவிலின் கும்பாபிஷேகத்திற்காக முதன் முதலில் தென்னிந்தியப் பாடகரான சீர்காழி கோவிந்தராஜனின் இசைக்கச்சேரியை ஒழுங்கு செய்தார். அன்று சீர்காழி கோவிந்தராஜன் புங்குடுதீவில் பாடிய பாடல்கள் வானொலி மூலம் இலங்கையெங்கும் ஒலிபரப்பானது.
இவ்வாறான பணிகளைச் ஊருக்குச் செய்தமையால் இவர் உத்தம சோழன் எனவும் அழைக்கப்பட்டார். கோவிலுக்கு மட்டுமல்ல ஊர்மக்களுக்கும் உறவினர்களுக்கும் அள்ளிக் கொடுத்த இவர் இறந்து விட்டாலும் அவர் கட்டிய சிவன் கோவில் இராஜகோபுரம் அவர் பெயரை இன்றும் உயர்வாக கூறிக்கொண்டே இருக்கின்றது.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 260-261