ஆளுமை:நாகரத்தினம், பொன்னுத்துரை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நாகரத்தினம் பொன்னுத்துரை
தந்தை கணபதிப்பிள்ளை சின்னத்தம்பி
தாய் செல்லம்
பிறப்பு 1914.07.31
இறப்பு 2004.06.28
ஊர் வேலணை
வகை கல்விமான்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகரத்தினம் பொன்னுத்துரை அவர்கள் பெண் கல்விக்கு முன்னோடியாக திகழ்ந்தவர். வேலணையில் 1914 ஆம் ஆண்டில் பிறந்த இவர் இளமையில் நாகபூசணி எனவும் அழைக்கப்பட்டார்.

வேலணை சரஸ்வதி வித்தியாசாலையில் ஆசிரிய பணியை ஆரம்பித்த இவர் ஓய்வு பெறும் காலத்தில் மூன்று தலைமுறையினருக்கு கல்வி புகட்டிய பெருமையைப் பெற்றவர். கல்விப்பணியினால் இவரை எல்லோரும் ரீச்சர் அக்கா அல்லது நாகரத்தினம் அக்கா என்றே அழைத்தனர்.

கிராமத்து அபிவிருத்தியிலும் முன்னேற்றத்திலும் ஈடுபாடு கொண்டு கணவர் பொன்னுத்துரையுடன் இணைந்து தேர்தல் காலங்களில் வாக்குரிமை பற்றியும் வாக்களிப்பு முறைபற்றியும் மக்களுக்கு அறிவூட்டும் பணியினை முன்னெடுத்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 309-311