ஆளுமை:தமிழ்ப்பிரியா, இளங்கோவன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தமிழ்ப்பிரியா இளங்கோவன்
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தமிழ்ப்பிரியா இளங்கோவன் ஓர் எழுத்தாளர் ஆவார். இவர் இலங்கை இந்திய பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்கு சிறுகதைகள், குறுநாவல்கள் எழுதி வருகின்றார்.தற்சமயம் பாரிஸ் மாநகரில் வாழ்ந்து வரும் இவர் T.T.N. தொலைக்காட்சியில் சித்திரம் பேசுதடி என்னும் நிகழ்ச்சியில் கவிதைகள் பாடியுள்ளார். வீரகேசரி, ஈழநாடு, தினகரன், ஈழமுரசு போன்ற பத்திரிகைகளிலும் மல்லிகை, சிரித்திரன் போன்ற சிற்றிதழ்களிலும் இவரது படைப்புக்கள் வெளிவந்ததோடு தினகரன் வாரமலரில் 'உண்மை அன்பிற்கு ஊறு ஏற்படாது' , மற்றும் 'இறைவன் கொடுத்த வரம்' ஆகிய இரண்டு குறுநாவல்களையும் எழுதியிருக்கின்றார். இவை தவிர இலங்கை வானொலியில் இவர் எழுதிய மெல்லிசைப் பாடல்கள், இசையும் கதையும், கவிதைகளென நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்கள் ஒலிபரப்பாகியிருக்கின்றன.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 457-458


வெளி இணைப்புக்கள்