ஆளுமை:முருகபூபதி, லெட்சுமணன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முருகபூபதி, லெ.
பிறப்பு 1951.07.13
ஊர் நீர்கொழும்பு
வகை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

லெ. முருகபூபதி (1951.07.13 - ) நீர்கொழும்பைச் சேர்ந்த எழுத்தாளர், பத்திரிகையாளர். தற்போதைய விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி 1954 இல் விவேகானந்த வித்தியாலயம் எனும் பெயரில் தொடங்கியபோது அதன் முதலாவது மாணவராகச் சேர்ந்தார். பின்னர் யாழ்ப்பாணம் ஸ்ரான்லிக் கல்லூரியிலும் நீர்கொழும்பு அல்கிலால் மகாவித்தியாலத்திலும் கல்விகற்றார். 1972ல் கனவுகள் ஆயிரம் சிறுகதை மூலமாக மல்லிகையில் அறிமுகமான இவருக்கு 1975ல் வெளியான சுமையின் பங்காளிகள் என்ற இவரது முதலாவது சிறுகதைத்தொகுதிக்காக இலங்கை சாகித்திய மண்டல விருது கிடைத்தது.

1977ல் இலங்கையின் வீரகேசரிப் பத்திரிகையில் பணிபுரியத் தொடங்கிய இவர், 1985ல் அதன் ஆசிரியர் குழுவில் இருந்த போது சோவியத் ஒன்றியத்தின் அழைப்பில் உலக இளைஞர் - மாணவர் விழாவில் கலந்து கொண்டார். நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தின் செயலாளராகவும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசியசபை உறுப்பினராகவும் கொழும்புக் கிளையின் செயலாளராகவும் பணிபுரிந்திருக்கிறார். பின்னர் 1987ல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த இவர், தொடர்ந்து சிறுகதை, கட்டுரை, பேட்டி, பயண இலக்கியம் என்பன எழுதியும் வெளியிட்டும் வருகிறார்.


சுமையின் பங்காளிகள், சமாந்தரங்கள், சமதர்ம பூங்காவில், நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள், வெளிச்சம், எங்கள் தேசம், பறவைகள், பாட்டி சொன்ன கதைகள், இலக்கிய மடல், சந்திப்பு, இலங்கையில் பாரதி, கடிதங்கள், மல்லிகை ஜீவா நினைவுகள், ராஜ ஸ்ரீகாந்தன் நினைவுகள் போன்றன இவரால் எழுதப்பட்ட நூல்களாகும்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 482-483

{{வளம்|19343|95-51}


வெளி இணைப்புக்கள்