ஆளுமை:புதுவை இரத்தினதுரை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் புதுவை இரத்தினதுரை
பிறப்பு
ஊர் புத்தூர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

புதுவை இரத்தினதுரை ஒரு சிறந்த கவிஞர், சிற்பக்கலைஞர். யாழ்ப்பாணம், புத்தூரைச் சேர்ந்தவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுத் துறையில் முக்கிய பங்காற்றியவர். விடுதலைப் போராட்டத்துக்கு தனது கவிதைகளால் உரமூட்டியவர். புரட்சிப் பாக்களை எழுதி இளைஞர்களை எழுச்சி கொள்ளச் செய்தவர். இவர் தனது 14வது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கி விட்டார். இவர் வியாசன், மாலிகா என்ற புனைபெயர்களிலும் பல கவிதைகள் எழுதியுள்ளார். இவர் எழுதிய "இந்த மண் எங்களின் சொந்த மண்" பலரது வரவேற்பையும் பெற்ற உணர்வு பூர்வமான பாடல்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 28-30
  • நூலக எண்: 2062 பக்கங்கள் 12-21