ஆளுமை:புவனேந்திரன், அம்பலவன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் புவனேந்திரன்
தந்தை அம்பலவன்
தாய் நேசம்மா
பிறப்பு 1956.09.14
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


புவனேந்திரன், அம்பலவன் (1956.09.14 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அம்பலவன்; தாய் நேசம்மா. இவர் தனது கல்வியை மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையிலும் மட்டகளப்பு கல்லடி சிவானந்த வித்தியாலயத்திலும் களுவாஞ்சிக்குடி பட்டிருப்பு மகா வித்தியாலயத்திலும் களுவாஞ்சிக்குடி உவெஸ்லி உயர்தர பாடசாலையிலும் கல்முனை கார்மல்பாத்திமா கல்லூரியிலும் கற்றார். பின் தான் ஆர்ம்பக் கல்வியை கற்ற குறுமண்வெளி மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையானது மட்டு சிவசக்தி வித்தியாலயமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டதின் பின் அங்கு ஆசிரியராக கடமையாற்றினார்.

இவரது முதல் கவிதையானது 1975ஆம் ஆண்டில் தெய்வத்தின் திருவுருவம் என்ற தலைப்பில் இலங்கை வானொலியில் வெளியானது. பின்னர் ஜேர்மனிக்கு புலம் பெயர்ந்து சென்ற இவர் அங்கும் தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்தினார். இவரது படைப்புக்களாக ஏறக்குறைய 6 சிறுகதைகளும், 4 கட்டுரைகளும், 450 கவிதைகளும் பிரசுரமாகியுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்


வளங்கள்

  • நூலக எண்: 1741 பக்கங்கள் 110-114
  • நூலக எண்: 1855 பக்கங்கள் 45-50